Monday, April 12, 2010

அதிர்வுகள் - 5 (பிகரு மக்கா பிகரு)

என்னத்த சொல்றது, நம்ம தலை எழுத்தோ என்னவோ எந்த பிகர பாக்க ஆரம்பிச்சாலும் அடுத்த சில மாசத்துல அதுக்கு கல்யாணம் ஆயிடுது. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பாத்த பொண்ணுக்கு போன மாசம் கல்யாணம், போன மாசம் பாத்தா பொண்ணுக்கு இந்தமாசம் கல்யாணம்.

இப்படியே போய்கிட்டு இருந்தா கல்யாணம் ஆகாத பொண்ணுகளை எல்லாம் கூட்டி வந்து கொஞ்ச நாளைக்கு சைட் அடரா மக்கா, அவளுக்கு கல்யாணம் ஆகட்டுமுன்னு சொல்லுவாங்க போல.

ஏங்க, எனக்கு மட்டும் தான் இப்படி நடக்குதா இல்ல உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்குதா. இருந்தா சொல்லுங்களே அத கேட்டாவது கொஞ்சம் மனச ஆத்திக்கறேன்.

***********************************************

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படித்தான் சும்மா இருக்காம ஏ மூக்க நானே ஓடசுகிட்டேன். நம்ம நண்பர் அனுப்பிய பாட்டு ரொம்ப நல்லாருந்துது. ஒரு நாப்பது தடவையாவது கேட்டிருப்பேன்.

கேட்டு ரசிசுபுட்டு பேசாம இருக்காம நமக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட போயி ஒரு நல்ல பாட்டு இருக்குது கேக்கரையான்னு ரொம்ம்ம்ப பாசமா கேட்டேன்.

அதுக்கு அது சொல்லுச்சு "இப்போ நா ரொம்ப பிசியா இருக்கேன் அப்புறம் கேக்கிறேன்".

அட இதே ஒரு பையன் சொல்லிருந்தா சரிடா மச்சான்னு வந்திருப்பேன். ஆனா நம்ம கேட்டும் ஒரு பொண்ணு இப்படி சொல்லிடுச்சேன்னு வந்தது பாருங்க ஒரு கோவம்!

அதுக்கப்புறம் எத்தனையோ தடவை அந்த பொண்ணு கேட்டும் அந்த பாட்ட கேக்கறதுக்கு  தரவே இல்லையே. நம்ம தன்மானத்த எப்படிங்க விட்டு கொடுக்கறது. ஏங்க நா செஞ்சது சரிதானுங்களே?

அதே பாட்ட நம்ப நண்பர்கள் கிட்டயும் கேளுங்கன்னு கொடுத்தேன். 'ம்' னு சொன்னதோட சரி. அப்புறம் திரும்பிக்கூட பாக்கல.

இதுல யாருங்க பரவால்ல ரகம்? நீங்களே சொல்லுங்க.

***********************************************

ஒரு சின்ன கவுத மாதிரி


நாம்நோக்கிய பிகர் பிறரை நோக்கின்
அப்பிறரை தூக்கி விடு.

***********************************************

 ரைட்டு.
கொல வெறி உங்க கண்ணுல தெரியுது.
அபீட்டு.....

 ***********************************************

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

8 comments:

  1. ன்னா.. நீங்க போடுற பின்னூட்டம்தாங்க்னா நமக்கு அடுத்த பிகர பாக்கறதுக்கு ஊக்கமுங்க்னா.

    ReplyDelete
  2. வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. //13 ஓட்டு நோ கமெண்ட்ஸ்//
    நொந்து போயிக்கமுங்க. நண்பர்களின் கொல வெறி சோகத்தை பகிர்ந்து கொண்ட பாலா வாழ்க

    //ன்னா.. நீங்க போடுற பின்னூட்டம்தாங்க்னா நமக்கு அடுத்த பிகர பாக்கறதுக்கு ஊக்கமுங்க்னா.//
    அது சரி

    ReplyDelete
  4. //கேட்டு ரசிசுபுட்டு பேசாம இருக்காம நமக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட போயி ஒரு நல்ல பாட்டு இருக்குது கேக்கரையான்னு ரொம்ம்ம்ப பாசமா கேட்டேன்.//

    கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்

    ReplyDelete
  5. //நொந்து போயிக்கமுங்க. நண்பர்களின் கொல வெறி சோகத்தை பகிர்ந்து கொண்ட பாலா வாழ்க//

    ஹஹாஹா..!

    ReplyDelete
  6. //Sabarinathan Arthanari said...

    //கேட்டு ரசிசுபுட்டு பேசாம இருக்காம நமக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட போயி ஒரு நல்ல பாட்டு இருக்குது கேக்கரையான்னு ரொம்ம்ம்ப பாசமா கேட்டேன்.//

    கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்//

    கம்பேனி சீக்ரெட்ட வெளிய சொல்லக் கூடாது ஆமா...

    ReplyDelete
  7. கடைசி வரை அது என்ன பாட்டுனு சொல்லவேயில்ல

    ReplyDelete
  8. //Siva said...

    கடைசி வரை அது என்ன பாட்டுனு சொல்லவேயில்ல//

    அத சொன்னா, சம்பத்தப் பட்டவங்களுக்கு தெரிஞ்சுபோயிடும் பாஸ்.

    ReplyDelete