Friday, March 5, 2010

கடவுளை சந்தித்தேன்

இன்றைய போலி நாகரீகம் நிறைந்த உலகில் நேரில் யாரும் பார்த்தறியாத கடவுளை சந்தித்தேன் என்று கூறினால் நம்புவதற்கு ஆளில்லை. அப்படியே நம்ப தயாராயிருந்தாலும் அவர்களுக்கும் தக்கதொரு சான்று தேவைப்படுகிறது.

நான் சந்தித்த கடவுள்

அழுக்குப் படிந்த உடையுடன் பேருந்தில் ஏறிய வயதானவரை எல்லோரும் அசூயையுடன் பார்த்தபொழுது அதுபற்றி கவலைப்படாமல் தன் பக்கத்தில் கூப்பிட்டழைத்து அமர்த்திகொண்ட சக பேருந்து பயணி.

உழைக்கும் நேரத்தில் உடற்ச்சோர்வினால் களைப்புற்று தள்ளாடிய உழைப்பாளியை சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொள்ள பணிந்த முதலாளி.

கையிலிருந்த தின்பண்டத்தைப் பார்த்து பசியோடு ஓடிவந்த நாய்க்குட்டிக்கு சற்றும் யோசிக்காமல் பாதியை பகிர்ந்து தந்த சிறுவன்.

தள்ளாடும் வயதிலும் உழைத்து உண்ணும் வைராக்கியத்தோடு காய்கறி விற்கும் மூதாட்டி.

தனது கடைப் பொருளேயாயினும் கெட்டுப்போன மிட்டாயை வியாபாரமாக்காமல் கடைக்கு வந்த சிறுமிக்கு வேறு மிட்டாய் கொடுத்த பெட்டிக்கடைக்காரர்.

இப்படி எத்தனையோ கடவுள்கள் நம்மைச்சுற்றி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தனக்கு என்று என்னாது பிறருக்காக கவலைப்படும் யாவரும் கடவுளுக்கு நிகரானவர்களே.


-

3 comments:

  1. ஆம். நடமாடும் கடவுள்கள். ஆனால் மனிதன் மாயையைக்கண்டு அல்லவா ஏமாறுகிறான். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Sabarinathan Arthanari

    Madurai Saravanan

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete