Monday, May 17, 2010

காதல் - நினைவுகள் தாங்கி

உன் 
          தலையுதிர் பூ
          வரவுக்கான காத்திருப்பு
          ஒரு புன்னகைக்கான தவம்
          நினைவுகளால் உறங்காத இரவுகள்
          அலைபேசி அழைப்புக்கான எதிர்பார்ப்பு

மற்ற பெண்களை தவிர்க்கும் பார்வை
நீ தவறவிட்ட கைக்குட்டை
உனக்கு பிடித்த பாடலின் முனுமுனுப்பு

இனி, எதுவும் இல்லை.

உன் திருமண அழைப்பை
எனக்கு அனுப்பாமலாவது இருந்திருக்கலாம்.

-

10 comments:

  1. //
    உன் திருமண அழைப்பை
    எனக்கு அனுப்பாமலாவது இருந்திருக்கலாம்.
    //

    மிகப்பெரும் ஏமாற்றம் தான்

    கவிதை அருமை

    ReplyDelete
  2. என் வாழ்வில் உனக்கு மட்டும் தனியிடம்..
    நான் விரும்பியது எல்லாம் கிடைக்க..
    கிடைக்காத ஒரே ஒரு பொருளாய் நீ !

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி சுதாகர் குமார்.
    உங்கள் கவிதை அழகு.

    ReplyDelete
  4. //ஒரு புன்னகைக்கான தவம்
    நினைவுகளால் உறங்காத இரவுகள்
    அலைபேசி அழைப்புக்கான எதிர்பார்ப்பு//

    இப்படி எதிர்பார்ப்புகள் எமாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் காதலிக்காமல் இருப்பது நல்லது.இது உங்கள் சொந்தக்கதை என்றால் ஆழ்ந்த அனுதாபங்கள். கவிதை அருமை.

    ReplyDelete
  5. //மற்ற பெண்களை தவிர்க்கும் பார்வை //
    வாழ்க்கையில இப்படி ஒரு சோகமா ? தவற மிட்ட பெரிய இழப்புங்க இது

    ReplyDelete
  6. நன்றி மதுரை சரவணன்.
    இது என் சொந்த அனுபவம் அல்ல. கற்பனையே.

    ReplyDelete
  7. //Sabarinathan Arthanari said...

    //மற்ற பெண்களை தவிர்க்கும் பார்வை //
    வாழ்க்கையில இப்படி ஒரு சோகமா ? தவற மிட்ட பெரிய இழப்புங்க இது//

    இதுக்குதாங்க மதுரை சரவணன் சொன்ன மாதிரி காதலிக்காமையே இருந்துட்டேன்.
    இருக்கிறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு ஊரெல்லாம் வீடு. சும்மா ஹிஹி...

    ReplyDelete
  8. நல்லாயிருக்குங்க கவிதை பாலமுருகன்...

    ReplyDelete
  9. நன்றி அஹமது இர்ஷாத்

    ReplyDelete