Saturday, February 20, 2010

தவளை தன் வாயால் கெடும்

ஒத்த பதிவ எழுதிட்டு ஊரு முழுக்க தம்பட்டம் அடிச்சதுக்கு வெச்சாருயா ஒருத்தரு ஆப்பு.

மத்தியானத்துல இருந்து நம்ம ஏரியா பக்கம் யார் வந்தாலும் வம்பா பிடிச்சு உக்காரவச்சு ப்ளாக் எழுதுன கதைய சொல்லிகிட்டிருந்தேன். சில பேரு அப்படியான்னு கேட்டுகிட்டாங்க, சில பேரு லிங்க் கொடு படிச்சுப்பார்கிறேன்னு சொன்னாங்க. நிலைமை இப்படி போய்கிட்டு இருக்கும்போது ஒரு நண்பர் வந்தார், வழக்கம்போல அவருகிட்டேயும் நம்ம பராக்கிரமங்களை பற்றி சொன்னேன். அப்போ எனக்கு தெரியலே (தெருஞ்சிருந்தா அடக்கி வாசிச்சிருக்கலாம்) நமக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையிலேயும் குதிச்சு கும்மி அடிச்சுட்டு போய்டுவாருன்னு.
ப்ளாக்க பத்தி சொன்னவுடனே அவரு கேட்ட முதல் கேள்வியிலேயே எனக்கு பேச்சு மூச்செல்லாம் நின்னு போச்சு.

அவரு கேட்ட கேள்வி "நீங்க ஏன் படத்துக்கு பாட்டெழுத கூடாது?".

இதுக்கு மேல நம்ம வாய திறந்தா இவருகிட்ட இருந்து தப்பிக்க முடியாதுன்னு நினைச்சுகிட்டு, பேந்த பேந்த முழிச்சு அவரையே பார்த்தேன். அவரு ஏதோ நா அத பத்திதா யோசிக்கிறதா நினைச்சு அடுத்த கட்டத்துக்கு போனாரு.

"நீங்க வேற என்னவெல்லாம் எழுதி இருக்கீங்க?"

இப்பவாவது நான் சுதாரிசிருக்கக் கூடாதா, மறுபடியும் என் திருவாய் மலர்ந்தேன். "twitter ல அப்பப்போ சின்னச் சின்னதா கவிதை மாதிரி எழுதுவேன்" என்று கூறி அதையும் காண்பித்தேன்.

சற்று நேரம் உற்று பார்த்தவர் "பாரதிராஜா படத்துல ஆரம்பதிலேயும் முடிவிலேயும் கவித மாதிரி கொஞ்சம் பேசுவாரே, அதே மாதிரி நீங்களும் ஏதாவது படத்துக்கு எழுதலாமே" என்றார். சரி இன்னைக்கு இவரு போதைக்கு நம்மதா உறுகா போல இருக்குன்னு நினைச்சுகிட்டு பாவமாக அவரையே பார்த்தேன்.

என்ன நினைத்தாரோ திடீரென்று "ஒன்னு செய்ங்க, முதல்ல சின்ன சின்ன T.V. நாடகத்துக்கு டைட்டில் சாங் எழுதுங்க" என்றார் (வெக்கிற ஆப்பையே எத்த்த்த்த்தனை விதமா வெக்கிறாங்க).

"சொல்லிட்டீங்கல்ல பொலந்து கட்டிபுடுறேன்" மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டேன்.

நான் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டதைப் பார்த்து அவருக்கும் தான் 'கொஞ்சம் ஓவராத்தா போய்ட்டமோன்னு' தோணி இருக்கும் போல, மெதுவாக இடத்தை காலி செய்துவிட்டார்.

இதில் சிறப்பு என்னவென்றால், இத்தனை யோசனை சொன்ன அவர் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று கூட பார்த்திருக்கவில்லை. இதிலிருந்து என்ன புரிஞ்சதுன்ன 'இப்படி பல ஆப்புகள வாங்கித்தா நம்ம பதிவர்களெல்லாம் ஒரு நிலைமைக்கு வந்திருக்காங்கன்னு'.

இது அனைத்தும் கற்பனையே என்று கொள்க (ஹிஹி!!)

5 comments:

  1. ஸ்ரீராம் பத்தி இப்படி ஒரு அவதுரு வழக்கு!!!

    ஐயோகோ!!!

    ReplyDelete
  2. இதில் வரும் நபர்கள், யாரையும் குறிபிடுவன அல்ல :)

    ReplyDelete
  3. ரைட்டு

    கலக்குங்க

    ReplyDelete
  4. Adutha varam song regasel iruku.... ready ya irunga

    ReplyDelete