Saturday, February 20, 2010

என்ன தலைப்பு வைக்கிறது!

வணக்கம் நண்பர்காள்,

இன்னைக்கு காலையில எழுந்தவுடனே முடிவு பண்ணிட்டேன் கண்டிப்பா பதிவு எழுதியே ஆகணும் என்று. ஆனா எங்க இருந்து ஆரம்பிக்கறது எதபத்தி எழுதுறதுன்னு ஒன்னும் புரியலே.

புலிய பார்த்து பூனையும் சூடு போட்டுகிட்ட கதையா எல்லோரும் பதிவு எழுதுறத பார்த்து இரண்டு வருசத்துக்கு முன்னாடி நானும் ப்ளாக் ஆரம்பிச்சேன். ஆரம்பத்துலியே கற்பனை குதிரை கொஞ்சம் சருக்கிட்டதால நம்ம இலக்கிய பயனத்த தொடரமுடியாம போச்சு. இப்போ திடீர்னு மீண்டும் பயனத்த தொடரலாமுன்னு மறுபடியும் குதிரைய தட்டி எழுப்பி ஏறி உக்காந்தாச்சு. பார்ப்போம், எவ்வளவு தூரம் போகுதுன்னு.

பதிவு எழுத ஆரம்பிச்சவுடனே முதல்ல ஒரு சின்ன பிரச்னை ஆரம்பம் ஆச்சு. என்ன தலைப்பு வெக்கிறது? (ஆரம்பமே அசத்த்த்தலா இருக்கே!!??). அப்புறந்தா தெரிஞ்சுது இது சாதாரண பிரச்சனை இல்ல, பதிவுலகத்துக்கே உள்ள சரியான தலைவலின்னு. அப்பாடா! தலைப்ப பத்தி எழுதியாச்சு.

பேரு வேற 'ஏகாந்த பூமி' ன்னு வெச்சாச்சு அதனால ஏகாந்தத்தை பற்றி மட்டும் தான் எழுதனுமோ, வேற ஏதாவது எழுதினா இவன்கூட யாரும் அன்னம் தண்ணி பொலங்க கூடாதுன்னு ஒதுக்கி வெச்சுருவாங்கலோன்னு ஒரே பயம்! சினிமா விமர்சனம் எழுதலாமுன்னா நேத்து நம்ம பார்த்த படத்துக்கு அதெல்லாம் ஒத்து வராது (வசனமே இல்லாத படத்துக்கு விமர்சனம் எதுக்கு). அரசியல் பத்தி எழுதலாமுன்னா வீடு தேடி ஆட்டோ வரும்னு பயபடுத்துறாங்க. வேற என்னதா எழுதுறது (இப்பவே கண்ண கட்டுதே). ஆனாலும் அதுக்காக அப்படியே விட்டுவிட முடியுமா, எதுவுமே இல்லாட்டியும் நாங்க வெறும் கையிலயே முலம் போடுவோம்ல.

மீண்டும் சிந்திப்போம்.

3 comments: