Friday, June 11, 2010

விடியாத இரவொன்று

அனுபவித்த இன்பத்தை
மீண்டும் மீண்டும் தேடும்
ருசி கண்ட பூனையாய்
மனது

நம்பிக்கை மேல் இழுக்க
துன்பங்கள் கீழ் இழுக்க
பள்ளத்தின் அந்தரத்தில்
வாழ்க்கை

வாழ்க்கையின் அர்த்தம் தேடி
புரியாத புதிர்தான்
வாழ்க்கை என்று புரிந்து கொண்ட
ஞானம்

முன்னே புகழ்வதும்
பின்னே  இகழ்வதுமாய்
மனிதம் மறந்துவிட்ட
சுற்றம்

வெறி கொண்ட மக்களிடம்
பிறர் நலன் என்பது
கேலிப் பொருளான
பரிதாபம்

பொருளீட்டும் கட்டாயத்தில்
தன்மானத்தோடு சேர்த்தே
இழந்துவிட்ட
நிம்மதி

சற்றேனும் நிம்மதி
என்றுணரும் இரவு
 வேண்டும் எனக்கு
"விடியாத இரவொன்று".

-

12 comments:

  1. மிக்க நன்றி முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  2. மிக மிக அருமை!

    ReplyDelete
  3. //வாழ்க்கையின் அர்த்தம் தேடி
    புரியாத புதிர்தான்
    வாழ்க்கை என்று புரிந்து கொண்ட
    ஞானம் //

    நல்லா இருக்குங்க

    ReplyDelete
  4. மனிதத்தை மிதித்து பொருள் புரட்டும் பூமியாய் மாறி வந்தாலும் இன்னும் அழியவில்லை என்று மனிதம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழித்தபடிதான் பாலமுருகன்.நம்புவோம்.வாழ்வோம்.

    ReplyDelete
  5. கவிதை அருமை

    ReplyDelete
  6. //மனிதம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழித்தபடிதான்//

    உண்மைதான்

    மிக்க நன்றி ஹேமா.

    ReplyDelete
  7. விடி வானில் விடியாத உள்ளம் கேட்கும் கவிக்கு வந்தனங்கள் ...

    ReplyDelete
  8. வந்தனங்கள்.
    நன்றி நியோ

    ReplyDelete