ஞானோதயம்

Posted by : Balamurugan | Thursday, December 23, 2010 | Published in

ஞானோதயம்

இன்னும் சிலருக்காவது
நல்லது செய்திருக்கலாமோ?
மனதின் ஞானோதயம்
பயனற்றுப் போனது
மரணத் தருவாயில்.

உடைந்த உளி

சிற்பியின் கையில்
உடைந்த உளி...
எனது கவிதை கருவிற்கு
கிடைக்காத வார்த்தைகள்.

சொல்லிச் சென்றது

பிரிந்த காதலியின்
ஒற்றைப் பார்வை
சொல்லிச் சென்றது
காதலின் போலித்தனத்தை

ஒற்றை ரூபாய்க்கு கையேந்தும்
பிச்சைக்காரனின் குரல்
சொல்லிச் சென்றது
மறந்து விட்ட எனது
மனிதாபிமானத்தை

என்னால் நடந்துவிட்ட
தவறுக்காக
நான் கேட்காமல் விட்ட மன்னிப்பு
சொல்லிச் சென்றது
மறந்துவிட்ட அடிப்படை நாகரிகத்தை


மொத்தத்தில்
இவை அனைத்தும் எனக்கு
சொல்லிச் சென்றது
மாறிவிட்ட மனித இயல்பை.


-

(4) Comments

  1. VELU.G said...

    நல்லாயிருக்குங்க

    December 23, 2010 2:08 PM
  2. அரசன் said...

    நல்லா இருக்குங்க ...

    December 23, 2010 4:20 PM
  3. பாலமுருகன் said...

    நன்றி VELU.G
    நன்றி அரசன்

    December 23, 2010 6:20 PM
  4. முனைவர்.இரா.குணசீலன் said...

    மொத்தத்தில்
    இவை அனைத்தும் எனக்கு
    சொல்லிச் சென்றது
    மாறிவிட்ட மனித இயல்பை.

    மனிதத்தை நினைவுபடுத்தும் பதிவு.

    அருமை.

    September 2, 2011 8:17 PM

Leave a Response